top of page
Search

ஊமைக்காதல் என்னது....!!!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jul 8, 2020
  • 1 min read

உன்னை காணும் நொடிகளில்

என் உதடுகள் புன்னகையில்

திளைப்பதும்

உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும்


நீ பாராத நேரத்தில் உன்னை மட்டுமே பார்க்கிற என் கண்கள்

உன்னை காணாத நொடிகளில் எங்கித்தவிப்பது ஏனடா ?


உன் பேர்கேட்கும் நேரமெல்லாம்

சட்டென்று தேடும் தேடல்களும்

நீ இல்லாது போகையில் தவித்துப்போகிறதை  நீ

அறிவாயா ?


ஒருவார்த்தை என்னிடம் நீ பேசினாலும் அதை ஓராயிரம் முறையேனும் எண்ணிப்பார்க்கும்

என் நினைவுகளை எங்கனம் புரிந்து கொள்வாய்?


என்னவன் நீயென எண்ணி

என் உறக்கம் தொலைத்த நானும் 

ஊமை தானடா உன்னிடம் தோற்றுப்போகிறேன் என் காதலை சொல்லிட எண்ணி...


-இஸ்ஸத் இஷாரா-



 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page