top of page
Search

யாவும் கற்பனையே..!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Dec 8, 2022
  • 1 min read

நினைத்தேன்

நீயும் எனக்காய் ஒரு நொடி

சிந்திப்பாய் என்று


நினைத்தேன்

உன் நினைவில் ஒரு முறையாவது

என்னை தேடிக்கொள்வாய் என்று


நினைத்தேன்

உன் ஒரு துளி கண்ணீரில் என்

காதல் உணர்வாய் என்று


நினைத்தேன்

உன் கனவில் என் விம்பம்

காண்பாய் என்று


நினைத்தேன்

உன் பயணங்களில் என்

வாசம் உணர்வாய் என்று


நினைத்தேன்

உன் ஆடைகளில் என்

அணைப்பை அறிவாய் என்று


நினைத்தேன்

நீயும் என்போல் இந்த பிரிவில்

ஒரு கணமேனும் சிறு வலி

உணர்வாய் என்று


இன்று நான் உணர்ந்தேன்

உன் நினைவிலும் நிஜத்திலும்

எனக்கான கணங்கள் யாவும்

என் கற்பனை மட்டும் தான் ;

என்றும் நான் உண்ணவள் இல்லை

என்று...


இஸ்ஸத் இஷாரா


 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page