top of page
Search

ஒருதலைக்காதல்....

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Sep 11, 2020
  • 1 min read

முழுவதும் உன்னுள்

தொலைந்து விட்டேன்

காரணம் அறிய மாட்டேனா

என்றும்


காவியக்காதல் கண்டது

எல்லாம் அற்பமாய்

தோன்றுதே நொடியும்

உன் அருகே


சில்லென்ற சிறு கீற்றாய் நீ என்னை பார்க்கிற நொடிகளில் தொலைந்துதான் போகிறேன் காரணம் இன்றியே


சொற்பமாய் சிரிக்கிற

போதிலும் அதை எண்ணி என் இரவுகளை தொலைத்துதான் போகின்றேன் சில வேளை


எனக்கான தேடலாய் நீ

இருப்பதை சொல்லியே

தீர்த்திட ஒரு நொடி போதும் இருந்தும்


சொல்லிடா தவிப்புகள்

நேர்கின்ற நொடிகளில்

ஒரு கணம் மறக்கிறேன் என்னையே நானும்....


:இஸ்ஸத் இஷாரா:

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page