top of page
Search

என்னவள்....!!!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Oct 15, 2020
  • 1 min read

தீயது எனக்கண்டும் என்ன கருவோடு சுமந்தவள்

தன் வாழ்வை இழந்து

என்னை வாழ வைப்பவள்

என் புன்னகைக்காக அவள்

கண்ணீரை விலையாய் கொடுத்தவள்

என்னை பெருமை பிறர் பாட

பலர் பேச்சுக்களில்

பேராய்ப்போனவள்

தன் துணையிழந்து என்னை

தூண் போல காத்தவள்

என் பிடிவாதத்தை பரிகாசம் செய்யாதவள் என் கண்ணீரை கையிலேந்துபவள்

என் கஷ்டங்களில் கண்ணானவள்

என் சோகங்களை செவிசாய்ப்பவள்

என் பேச்சின் மொழியறிபவள்

என் வாழ்க்கையின் அர்த்தமானவள்

என் வாழ்வானவள்

என் உயிரானவள்

என்னவள்


என் தாய் ....


-இஸ்ஸத் இஷாரா-


 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page