top of page
Search

அவனும் அவளும் காதலும்...!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jul 9, 2020
  • 1 min read

மௌனமதுவும் மந்திரமாய் போகலாம் ஊடல் கொள்ளும் வேளையில்

சிறு பார்வை கூட மௌனத்தை கலைத்து விடலாம் காதல் கொள்ளும் வேளையில்

சிறு தீண்டலும் சில்லெனத்தொட்டு விடலாம் உயிர் நாடியை


காவியம் தேடும் காதல் எல்லாம்

பார்வை ஒன்றிலே தோன்றியது தான்

பரவசப்புன்னகை வருவதெல்லாம்

தலைவனை காணும் நொடிகளில் தான்

முள்ளெனக்கண்டும் மோகம் கொள்வதெல்லாம்

அவள் மீட்டும் சிறு புன்னகையினாலேயே


சொல்லாக்காதலும் துளிர் விடும் அரும்பென

மங்கையவள் பார்வையிலே சில்லெனப்போவதெல்லாம்

அவன் கொள்ளும்

நாணத்தை ஒருகணம் ரசித்திடவே

அவள் போடும் வேஷங்களாய் போவதும்

இக்காதல் செய்யும் மாயை தானோ?


முட்டிமோதி அவிழ்த்துவிட்ட போதிலும்

அவள் நாணமாய் சிரித்திட ஒரு நொடி

அவன் படும் அவஸ்தயும் ஒரு வகை

இன்பம் தானே- அவள் சரியென்ற

ஒற்றைச்சொல்லவிழ்க்கும் வரை...


-இஸ்ஸத் இஷாரா-

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page