top of page
Search

மீதி...

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Aug 16, 2022
  • 1 min read

இழப்பில் எந்த வலியும்

இல்லை என உணரும் போது

இழந்தவை எல்லாம் நமக்கு

உரியவை இல்லை என்பது

தெளிவாகிறது


தேடலில் கிடைத்த பொருள்

ஒன்று வேண்டாம் என

ஒதுக்கிய போதும் நம்மில்

நிலைத்தே போய் விடும்

இறுதி வரை


எதிர்பாராமல் கிடைக்கும்

உறவுகள் எந்த அளவு சந்தோஷம்

தந்தாலும் சில காலம் தன்னில்

வேறோர் உறவை நாடி

உதறிப்போக கூடும்


ஆறுதலான அன்பும்

தெவிட்டாத காதலும்

எண்ணில்லா அக்கறையும்

சில காலம் கழிந்து

காணாமல் போகக்கூடும்


காலம் காட்டும் கோலம் எல்லாம்

அளவில்லா புன்னகையும்:

ஆழமான கண்ணீரும்;

அளவிட முடியா வலியும்;

மடிந்து போகும்

உணர்வுகளும் தான்...


: இஸ்ஸத் இஷாரா

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page