top of page
Search

கனவு...!!!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Sep 22, 2020
  • 1 min read

Updated: Jul 13, 2022




வருவதும் போவதுமாய் உன் நியாபகங்கள் என்னை ஆட்கொணரும் வேளைகளில் எல்லாம் சொல்லாமல் வாசற்படியை தாண்டுகின்றது

என் நாணங்கள்


வர்ணிக்க முடிந்திடா கனமாய் நெஞ்சோர வலிகள் கொஞ்சம் வலித்தாலும் சில இன்பமாய் மாறிப்போகிறது


கார்கால மேகமாய் கண்ணோரக்கண்ணீர் சில வேளை சில்லிடும் போதெல்லாம் உன் உதட்டோர சிரிப்புக்களில் அதுவும் காணாமலே போகிறது


முண்டியடிக்கும் அலையென உன்னை கண்டிட தவிக்கும் என் விழிகளில் சில நேர கனாக்களும் வந்தே நிறைந்து போகிறது என் கன நேர காத்திருப்புக்களில்


சில நேர அணைப்புக்களும் சில வேளை என்னை வெட்கிக்க வைக்கிறது அது தலையணையாய் போகின்ற பொழுதுகளில்


கன்னத்தில் முத்தங்களும் கற்பனையாய் இருந்திடவே

என்ன எண்ணி நாணம் கொள்கின்றேன் தருணங்கள்

பல கழிந்தும்


வார்தைகளாய் போகாதவரை இந்த காதலும் சில வேளை கனவுதானே - என்னை கொன்றுவிடவும் துணிந்திடுமோ தினமும்....


:இஸ்ஸத் இஷாரா:

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page