
அவள்..!!!
- Izzath Isharah

- Jul 15, 2020
- 1 min read
கார்மேகம் மோதியதால் கொண்ட கருங்குழலோ மங்கையவள் கூந்தலாகி அருவியென தாண்டவம் ஆட தொடங்கியதோ
தென்றல் ஒன்று தீண்டுகயில்
மூன்றாம் பிறைகொண்டு பதித்துவிட்ட நுதல் அவள் கொண்டதால் என்னவோ அதை ஆட்சி செய்ய செம்பொன் பதித்த பொட்டொன்று பதிந்ததுவோ
காவியப்போரென்றும் கண்டிரா வில் ரெண்டு அவள் புருவங்கள் ஆனதோ கோதையவள் விழி மூட மட்டும் போதாது போகிறதோ
கள்வனவனை கண்டிடும் தருணங்களில்
மங்கையவள் பார்வை மோதி காளையர் கட்டுண்டதால் என்னவோ அவள் கருவிழியால் பார்ப்பதை குறைத்தனளோ
நித்தம் சிறு விழி மோதல்கள் குறைந்தனவோ
மொட்டவிழா மலதனில் நின்று தவறிய இதழ்கள் கொண்டு உருவானதோ அவள் உதடுகள் அதில் கசிந்த தேன் துளியென மென் சிரிப்பும் சிந்தியதோ
மெல்லிய வளை கோடாய் வரைந்தனல் இடையொன்று கொண்டனள் மேனியெங்கும் பரவிய நூலாடை ஒன்று ஆகிடேனோ என்றும் அவளுடனே வாழ்ந்திடேனோ....
:இஸ்ஸத் இஷாரா:




🖤